மரியபோல் நகரில் பயங்கர துப்பாக்கிச் சண்டை - முட்டிக்கொண்ட ரஷ்யா - உக்ரைன் ராணுவ படை - மக்கள் அலறி அடித்து ஓட்டம்

people-scream ரஷ்யா-உக்ரைன் போர் ukraine-russia-war gunfight துப்பாக்கிச் சூடு மக்கள் பதற்றம்
By Nandhini Mar 01, 2022 08:54 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.

உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தையின் முதற்சுற்று நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்யா ராணுவ படைகளுக்கம், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

பயங்கரமான துப்பாக்கிச் சத்தத்தால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பலர் பீதி அடைந்து வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் பலத்த சண்டை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.     

மரியபோல் நகரில் பயங்கர துப்பாக்கிச் சண்டை - முட்டிக்கொண்ட ரஷ்யா - உக்ரைன் ராணுவ படை - மக்கள் அலறி அடித்து ஓட்டம் | Ukraine Russia War Gunfight People Scream