உக்ரைன் மீது ரஷ்ய ராணுவ படை பயங்கரத் தாக்குதல் - பற்றி எரியும் கட்டிடங்கள் - நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு

power-outage உக்ரைன்-ரஷ்யா போர் ukraine-russia-war across-the-city நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு
By Nandhini Mar 01, 2022 09:47 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் பலத்த சண்டை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேபோல், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமாக தாக்குதலுடன் வேகமாக முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 2-வது முறையாக உக்ரைனின் பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, உக்ரைனில் மரியபோல் நகரில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.