ரஷ்யா - உக்ரைன் மீது இதுவரை 500 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் - சுட்டிக்காட்டிய அமெரிக்கா

Russia United States Attack Ukraine War US தாக்குதல் 500-Missiles 500 ஏவுகணைகள் அமெரிக்கா
By Nandhini Mar 05, 2022 07:09 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 10-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.

நேற்று அதிகாலை தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது ரஷிய படைகள் நேரடியாக குறி வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதனையடுத்து, ரஷ்ய ராணுவத்தின் சுகோய் சு-25 போர் விமானத்தை உக்ரைன் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், உக்ரைனில் பதற்றமாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மக்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இதுவரை 500 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.