புதினுடன் நேருக்கு நேராக பேச நான் தயார் - உக்ரைன் அதிபர் அதிரடி
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ரஷிய அதிபர் புதினுடன் நான் நேரடியாக பேச நான் தயாராக உள்ளேன். புதினை நான் சந்திக்காதவரையில், ரஷியா போரை நிறுத்தப்போவது இல்லை. போர் நிறுத்தத்துக்கு பிறகு ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ள கிரீமியா, கிழக்கு டான்பாஸ் ஆகியவற்றின் நிலை, பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருக்கிறேன் உள்ளேன்.