காவல்நிலையத்தில் புகார் சொன்ன ukg சிறுவன் : அசந்து போன காவலர்கள்
காவல் நிலையத்திற்குச் சென்று போக்குவரத்தை சரி செய்ய கோரி 6 வயது சிறுவன் செய்த செயல் காண்போரை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வரும் 6 வயது சிறுவன் கார்த்திகேயன்
இந்த சிறுவன் பலமனேர் காவல்நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் பாஸ்கரை நேரில் சந்தித்து எங்கள் பள்ளி அருகே சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி வருகின்றனர் இது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது
#AndhraPradesh: A 6-year-old UKG student Karthikeya of #Palamaner in #Chittoordistrict complaints to the police, on traffic issues near his school. He asked the police to visit the school and solve the problem.@NewsMeter_In @CoreenaSuares2 @ChittoorPolice @APPOLICE100 pic.twitter.com/RxiJpSYzY0
— SriLakshmi Muttevi (@SriLakshmi_10) March 19, 2022
எனவே நீங்கள் வந்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என கூறினார் அவன் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த போலீசார் இனிப்புகளை கொடுத்தனர்
பின்னர் நாங்கள் வந்து போக்குவரத்தை சரி செய்வோம் என்று கூறி அவனை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது