15 வயது மாணவனை மயக்கி உல்லாசத்தில் ஈடுபட்ட ஆசிரியை - பகீர் பின்னணி!
மாணவனை, ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
பிரிட்டன், பக்கிங்காம்ஷைர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தவர் கேண்டிஸ் பார்பர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் தன்னிடம் படித்த 15 வயது மாணவனுக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியும், ஆபாசமான வார்த்தைகள் கொண்ட மெசேஜ் அனுப்பியும் மோசமாக நடந்துள்ளார்.
ஆசிரியை தகாத செயல்
மேலும், அந்த மாணவனை தனியாக வயல்வெளிக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவனை மயக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 6 ஆண்டுகள், 2 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. அதன்பின், ஆசிரியை மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. அதனையடுத்த சமீபத்திய விசாரணையில் அவர் காலவரையின்றி ஆசிரியர் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டார்.
மீண்டும் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைக் குழு இதுகுறித்து கேண்டிஸ் பார்பரின் நடத்தை மிகவும் மோசமானதாகவும் சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் இருந்தது. எதிர்காலத்தில் அவர் எந்த கல்வி நிறுவனத்திலும் வேலை பார்க்க தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளது.