பாகிஸ்தானில் இந்திய மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டாம் - யூஜிசி எச்சரிக்கை..!
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டாம்.அங்கு பெறப்படும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அறிவித்துள்ளது.
இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் மேற்படிப்பு பயன்றால் அவர்களது பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது எனவும் இந்தியாவில் அவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியாது எனவும் யூஜிசி விளக்கியுள்ளது.
இருப்பினும்,பாகிஸ்தானில் உயர்கல்வி பயின்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் சான்றிதழ் அங்கீகரிக்கப்படும் அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.