நீட் என்பது துரோகமும் சூழ்ச்சியும் மட்டுமே : உதயநிதி ஸ்டாலின்

twitter udhayanidhistalin neetexam
By Irumporai Sep 14, 2021 12:00 PM GMT
Report

நீட் தேர்வு என்பது துரோகமும் சூழ்ச்சியும் மட்டுமே என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.நீட்தேர்வு நேற்று முன்தினம் நடந்த நிலையில் நீட் தேர்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு அச்சம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் நீட் தேர்வு எழுதிய அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரண்டு தற்கொலைகளுக்கும் அரசியல்வாதிகளே காரணம் என சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் கனிமொழி தற்கொலை குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் - வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது எனக் கூறியுள்ளார்.