கர்ணன் பட சர்ச்சை காட்சிகளை திருத்துவதாக படக்குழு உறுதி - உதயநிதி ஸ்டாலின்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கர்ணன் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதி மோதல்களை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது கர்ணன் ஒரு சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. கொடியங்குளம் எனும் ஊரில் நடைபெற்ற சாதி மோதலை பொடியன்குளம் என மாற்றி படமாக்கப்பட்டுள்ளது.
கொடியங்குளத்தில் சாதி மோதல் 1995-ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் திரைப்படத்தில் 1997-ம் ஆண்டு நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. கொடியங்குளம் சம்பவம் நடைபெற்ற 1995-ம் ஆண்டு ஆட்சியில் இருந்து அதிமுக, ஜெயலலிதா முதல்வராக இருந்தார்.
ஆனால் அதனை மாற்றி திமுக ஆட்சி செய்த 1997-ம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காட்டப்பட்டுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. இந்நிலையில் கர்ணன் படத்தைப் பார்த்துள்ள உதயநிதி ஸ்டாலின் அது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.
அதில், “‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் @dhanushkraja ,அண்ணன் @theVcreations , இயக்குநர் @mari_selvaraj மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.
— Udhay (@Udhaystalin) April 13, 2021
1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.” என்றுள்ளார்.
இதன் மூலம் கர்ணன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.