உண்ணாவிரத போராட்டத்தில் ஒளிபரப்பான "அந்த" வீடியோ...கண்கலங்கிய உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்த மாணவி அனிதாவின் வீடியோ ஒளிபரப்பட்ட போது, கண் கலங்கி உள்ளார்.
உண்ணாவிரத போராட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் நீட் தேர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் துவங்கியுள்ளது. திமுகவின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்தை தமிழகத்தின் நீர்வள துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் துவங்கி வைத்தார்.
கண்கலங்கிய உதயநிதி
இதில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் வாழ்க்கை பற்றிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதனுடன் சேர்த்து மாணவி அனிதாவின் வீடியோவும், அனிதா கொடுத்த பேட்டியும் காட்சிப்படுத்தப்பட்டது. இதை பார்த்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்ணீர்விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.