உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் - அன்பில் மகேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்
சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, அவர் அந்நிகழ்ச்சியில் பேசுகையில், கலைஞருக்கு பின்பு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக தயாராக இருக்கிறார். வாரிசாக இருந்தாலும் கஷ்டப்பட்டுதான் மேலே வருகிறார்கள் என்று பேசினார்.
இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைப்பட்டிருக்கிறது.