முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்
2வது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சரி்டம் வாழ்த்து பெற்ற உதயநிதி
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இதே பதவியில் நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் திமுக இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்த பெற்றார்.
இளைஞரணியை ஏறத்தாழ 40 ஆண்டுகள் வளர்த்தெடுத்து வலுப்படுத்திய கழகத் தலைவர்@mkstalin அவர்களிடம், @dmk_youthwing செயலாளராக கழக பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி நன்றி தெரிவித்து வாழ்த்துபெற்றேன். திறன்மிகுந்த கழக இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். pic.twitter.com/NhkN5L1JUu
— Udhay (@Udhaystalin) November 23, 2022