உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு - சோகத்தில் திமுக தொண்டர்கள்
சேப்பாக்கம் தொகுதியில் தனது வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர் ஒருவர் மறைந்தது உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.விடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் அத்தொகுதியில் போட்டியிடப்போவது உறுதியான மறுநிமிடமே சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் சேப்பாக்கம் பகுதி திமுக செயலாளர் மதன் மோகன் தீவிர பணிகளை முடுக்கி விட்டார்.
மதன் மோகனுக்கு பக்க பலமாக இருந்தவர் அவரின் மாமனார் கே.முனுசாமி ஆவார். இவர்களின் தேர்தல் பணி உதயநிதியை வெகுவாக கவர்ந்தது. முனுசாமியின் வீட்டில் தான் திமுக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் அலுவலகத்துக்கு வரும் திமுக தொண்டர்களிடமும், வாக்கு சேகரிக்கு சென்ற இடங்களில் பொதுமக்களிடமும் முனுசாமி நெருங்கி பழகி கட்சிக்காக அயராது பாடுபட்டார்.
இதனிடையே சமீப காலமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த முனுசாமி திடீரென இன்று காலமானார். இந்த தகவலை அறிந்த உதயநிதி ஸ்டாலின் வெகுவாய் உடைந்து போனார். உடனே சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு திமுக தொண்டர்கள் புடை சூழ, விரைந்து வந்த உதயநிதி ஸ்டாலின் முனுசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.உதயநிதி ஸ்டாலின் உடைந்து நின்றதை பார்த்து தொண்டர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.