சனாதன விவகாரம்..அமைச்சரா இருக்கவே உதயநிதிக்கு தகுதியில்ல...சசிகலா..!!
சனாதனம் விவகாரத்தில் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சசிகலா கருத்து
இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா, சனாதனத்தை பற்றி உதயநிதிக்கு என்ன தெரியும் என கேள்வி எழுப்பி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துணிச்சல் போதாது என்று விமர்சித்தார்.
அதே நேரத்தில், மகளிருக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் திட்டம் குறித்து விமர்சித்து பேசிய சசிகலா, அரசின் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கும் நிலையில், இது முழுமையாக செயல்படுத்த முடியாத திட்டமாக உள்ளது என தெரிவித்தார்.
தேர்தல் வெற்றிக்காகவே..!
மேலும், இது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்படவுள்ள திட்டம் என் விமர்சனம் செய்த சசிகலா, ஐ.ஏ.எஸ். அதிகாரியிடமே பணம் கேட்கக் கூடிய அவலம் தான் திமுக ஆட்சியில் இருப்பதாக சாடினார்.
அதிமுக ஆட்சியில் இது போல் கட்சிக்காரர்கள் யாரேனும் செய்தால் ஜெயலலிதா சும்மா விட்டிருப்பாரா என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பி ஏன் முதல்வர் ஸ்டாலினால் தன் கட்சி நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்க முடியவில்லை என வினவினார்.