பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் தமிழகத்தில் போட்டியிடட்டும்...சவால் விடும் உதயநிதி
எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜக சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதிமுகவினர் நிலைப்பாடு என்ன?
94-வது அகில இந்திய MCC– முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் பரிசளிப்பு விழா சென்னை எழும்பூாில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பாிசுத்தொகை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய சனாதனத்தை பற்றிய கருத்திலும், பொதுவாகவே சனாதனம் போன்ற விஷயங்களில் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் எந்த மாதிரியான நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பதை கேட்டுசொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்.
தைரியம் இருந்தால் தமிழகத்தில் போட்டியிடட்டும்
மேலும், தான் சனாதனம் குறித்து தான் பேசியது சரியானது என சுட்டிக்காட்டிய உதயநிதி, அதனை பாஜகவினர் திரித்துப் பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினாா். எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே சனாதனம் குறித்த பிரச்னையை பாஜக கையில் எடுத்துள்ளதாக தொிவித்த அவா் பொய் செய்திகளை பரப்புவதுதான் பாஜகவின் வேலை என தெரிவித்தார்.
தொடா்ந்து பேசிய உதயநிதி, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக கூறுவது நிச்சயமில்லாத ஒன்று என குறிப்பிட்டு, மோடிக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் போட்டியிடட்டும் என்றும், நாம் தமிழர் சீமான் இது போன்ற விஷயங்களில் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசிவார் என்றும் கூறி சென்றார்.