‘’ நான் சவால் விடுகிறேன் முடிந்தால் இத பண்ணி பாருங்க ‘’ : எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கட்டும் நான் சாவல் விடுகிறேன் என தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, வரும் 19 - ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் அணைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மதுரையில் தேர்தல்பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அனையூர் பகுதியில் தேர்தல்பரப்புரை மேற்கொண்டார் அப்போது பேசுகையில். மகளிர் உதவி தொகை ரூ. 1000 விரைவில் நிச்சயம் வழங்கப்படும்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து 9 மாதங்களில் 10 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு செய்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என கூறினார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றம் முடக்கப்படும் என கூறினார். நான் அவருக்கு சவால் விடுகிறேன் தைரியம் இருந்தால் முடக்கி பாருங்கள். மீண்டும் தேர்தல் வந்தால் 200 இடங்களில் தி.மு.க வெற்றி பெரும். அ.தி.மு.க படு தோல்வியை சந்திக்கும்.
நான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காணாமல் போய் விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார்.
நானா காணாமல் போய் விட்டேனா? என் மேல் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாசம் அதிகம், சமீப காலமாக என்னை அதிகமாக தேடுகிறார் என உதய நிதி ஸ்டாலின் பேசினார்.