லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றம் - காவலர் நியமனம் குறித்து உதயநிதி கண்டனம்

Udhayanidhi Stalin Tamil nadu TVK
By Vinoja Jul 17, 2026 02:48 PM GMT
Report

தமிழ்நாட்டில் காவலர் நியமனத்தை மேலும் ஓராண்டுக்கு தள்ளி வைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றம் - காவலர் நியமனம் குறித்து உதயநிதி கண்டனம் | Udayanidhi Post About Police Appointment Postponed

இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும் 

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான காவலர் நியமனத்தை தாமதப்படுத்துவது காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அட்டவணைப்படி, காவலர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டுதான் வெளியாகும் எனக் கூறிய அவர், இதனால் சட்டம் ஒழுங்கு நிலைமையும், காவல்துறை பணியில் சேர விரும்பும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என விமர்சித்துள்ளார்.

மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர் நியமனப் பணிகளை தொடங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.