உல்லாசத்திற்கு தடை: 2 வயது குழந்தை முகத்தில் சூடுவைத்த கொடூர தாய்!

Tamil nadu Chennai Child Abuse Crime
By Sumathi Oct 01, 2022 12:54 PM GMT
Report

2வது கணவருடன் சேர்ந்து, தாய் தனது குழந்தையின் முகத்தில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2வது திருமணம்

சென்னை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர்(28). கடந்த 3 வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணமாகியுள்ளது. இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. கருத்து வேறுபாடால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

உல்லாசத்திற்கு தடை: 2 வயது குழந்தை முகத்தில் சூடுவைத்த கொடூர தாய்! | Two Year Old Girl Child Tortured By Mother

பிறகு, அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பானு, தன்னுடைய அம்மா கன்னியம்மாவுக்கு போன் செய்து, குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உல்லாசத்திற்கு தடை

இதனால், கன்னியம்மாளும், பானு வீட்டுக்கு சென்று குழந்தையை பார்த்துள்ளார். அப்போது குழந்தை முகத்தில் காயங்களும், சூடு வைத்த கொப்புளங்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சென்னை எழும்பூர் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் முகத்தில் காயம், சூடு வைத்த தழும்பு இருந்ததை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே விரைந்த வந்த சாஸ்திரி நகர் போலீசார்

குழந்தைக்கு சித்ரவதை  

குழந்தையின் பாட்டி கன்னியம்மா மற்றும் தாய் பானுவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உல்லாசமாக இருப்பதற்கு முதல் கணவரின் குழந்தை தொல்லையாக இருப்பதால், பானுவும், ஜெகனும் சேர்ந்து குழந்தையை அடித்தும் சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளனர்.

தொடர்ந்து, 2 பேரையும் போலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.