நடிகர் சூர்யாவுக்கு கட்ட அவுட் வைக்கும் போது மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி..!
ஆந்திராவில் நடிகர் சூர்யாவுக்கு கட்ட அவுட் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் 48 வது பிறந்த நாள்
நடிகர் சூர்யாவின் 48 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இரவு 12.01 க்கு வெளியான நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இருவர் உயிரிழப்பு
இதனிடையே ஆந்திராவின் பால்நாடு பகுதியில் நரசராவ்பேட்டை என்ற இடத்தில் சூர்யாவின் ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பெரிய கட்ட அவுட் வைத்துள்ளனர்.
அப்போது கட்ட அவுட்டில் இருந்த பெரிய இரும்பு ஃபிரேம் மேலே இருக்கும் மின்சார கம்பியில் உரசிய போது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லுாரி மாணவர்களும் சூர்யாவின் ரசிகர்களுமான 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.