ராணி எலிசபெத் மரணத்தை முன் கூட்டியே கணித்த டுவிட்டர் பயனர் - வைரலாகும் பதிவு

Twitter Queen Elizabeth II England
By Thahir Sep 09, 2022 11:28 AM GMT
Report

ராணி எலிசபெத்தின் மறைவை முன்கூட்டியே கணித்த டுவிட்டர் பயனரின் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

எலிசபெத் மறைவை முன்னரே கணித்த நபர் 

நேற்று இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடலநலக்குறைவு காரணமாக தனது 96 வயதில் காலமானார்.

லண்டனில் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி பிறந்தவர் மகாராணி எலிசபெத். 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் எனப்படும் பிரிட்டிஷ் ஆண்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகித்தார்.

பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதிலும் ராணி எலிசபெத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். இவரின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும் பல உலக நாடுகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ராணி எலிசபெத் மரணத்தை முன் கூட்டியே கணித்த டுவிட்டர் பயனர் - வைரலாகும் பதிவு | Twitter User Who Predicted Queen Elizabeth S Death

இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் மறைவை முன் கூட்டிய ஒரு டுவிட்டர் பயனர் ஒருவர் கணித்து அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 அன்று இறக்கிறார் என்று இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி டுவிட் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் மே 25 ஆம் தேதி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மார்ச் 17, 2062 அன்று பூமி முழுவதுமாக தீயில் மூழ்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவை பதிவு செய்தவர் யார் என்ற தகவல் தெரியவில்லை.இவரின் இந்த டுவிட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.