தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை! உதயநிதி ஸ்டாலின் கண்டன பதிவு

Chennai TVK
By Fathima Sep 06, 2026 07:18 AM GMT
Report

சென்னை அடையாற்றில் தவெக பிரமுகர் கண்ணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளபதிவில்,

நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.

தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை! உதயநிதி ஸ்டாலின் கண்டன பதிவு | Tvk Murder Udhayanidhi Stalin Criticism

அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை! தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?

இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?

இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.