பிரபல நடிகை தற்கொலை... துக்கம் தாங்காமல் காதலனும் தூக்கிட்டு உயிரிழந்தார் - பரபரப்பு சம்பவம்

By Nandhini Jul 06, 2022 12:43 PM GMT
Report

நடிகை தற்கொலை

சமீபத்தில், பிரபல ஒடியா தொலைக்காட்சி நடிகை ரஷ்மிரேகா ஓஜா, புவனேஷ்வரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம், ரசிகர்களையும், சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தன் மகள் மரணத்திற்கு காரணம் அவரது காதலன் சந்தோஷ் பத்ரா என்று நடிகையின் தந்தை பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

காதலன் தூக்கிட்டு தற்கொலை

இந்த தற்கொலை வழக்கு விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், இன்று ஒரிசா மாநிலம், ரூர்கேலாவில் உள்ள தன்னுடைய வீட்டில் ரஷ்மிரேகா ஓஜாவின் காதலன் சந்தோஷ் பத்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து சந்தோஷினின் தாயார் பேசுகையில், என் மகன், அவரது காதலி ரஷ்மிரேகாவின் மரணத்திற்குப் பிறகு 'மனநலம் பாதித்தவர் போல் காணப்பட்டார். ஏற்கனவே அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தோம். கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நினைக்கவில்லை என்றார்.

காதலியின் மரணத்தை தொடர்ந்து, காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகை தற்கொலை... துக்கம் தாங்காமல் காதலனும் தூக்கிட்டு உயிரிழந்தார் - பரபரப்பு சம்பவம் | Tv Actress Rashmirekha Ojha Boyfriend Suicide

ஃபேஸ்புக் மூலம் காதல்.... கோலாகலமாக திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்