பிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் பலி - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாணி குராலே
மகாராஷ்டிராவின் கோலாபூர் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை கல்யாணி குராலே ஜாதவ்(32). இவர் மராத்தி மொழி டிவி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். கோலாபூரில் தனது வசிப்பிடத்திற்கு அருகே உள்ள ஹலோந்தி என்ற பகுதியில் உணவகம் ஒன்றை கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் புதிதாக திறந்துள்ளார்.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இவர் தனது உணவகத்திற்குச் சென்று வாடிக்கையாளர்களைக் கவனிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், உணவகத்தில் இருந்து கல்யாணி தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
விபத்தில் பலி
அப்போது சங்கிலி - கோலாபூர் நெடுஞ்சாலையில் பயணித்த போது ஒரு டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானார். இதில் கல்யாணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரை உலகினர்மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஷிரோலி பகுதி காவல்துறையினர் ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.