பிரபல நடிகை துனிஷா தற்கொலை... - காதலன் ஜாமீனில் வெளியே வந்தார்...!
பிரபல நடிகை துனிஷா தற்கொலை வழக்கில், காதலன் ஷீசன் கானுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பிரபல நடிகை துனிஷா தற்கொலை
‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20). சமீபத்தில் இவர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக துணை நடிகரும், துனிஷாவின் காதலருமான ஷீசன் கானை (28) போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். என் மரணத்திற்கு ஷீசன் கான் தான் காரணம் என்றும், என் மகள் மரண வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷீசன் கான் போதைப்பொருள் உட்கொள்வதாகவும், பல நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நடிகை துனிஷா ஷர்மாவின் தாய் குற்றம் சாட்டினார்.
ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த ஷீசன் கான்
இந்நிலையில், பிரபல நடிகை துனிஷா தற்கொலை வழக்கில் இன்று ஷீசன் கானுக்கு மும்பை வசாய் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை வந்தது. அப்போது, இந்த வழக்கை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.தேஷ்பாண்டே விசாரித்தார்.
அப்போது, இவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தற்போது, 70 நாட்களுக்கு பிறகு காதலன் ஷீசன் கான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஷீசன் சிறையில் இருந்து வெளியே வந்ததும், தன்னுடைய சகோதரியும், தாயும் கட்டிப்பிடித்து அழுதார்.