புலிகள் இயக்கத் தலைவர் முன்கூட்டியே பலவற்றை உணர்ந்திருந்தார்!! - திருச்சி வேலுச்சாமி நேர்காணல்!

By Swetha Subash May 17, 2022 01:18 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

இலங்கையில் மக்களின் கடுமையான போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார்.

இதனையடுத்து மகிந்த ராஜபக்ச ஆதரவு அரசியல்வாதிகளை டார்கெட் செய்து பொதுமக்கள் தாக்க தொடங்கினர். அரசுக்கு எதிரான இந்த போராட்டம் வன்முறையாக மாறி 100-க்கும் அதிகமான ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதேபோல் ராஜபக்சேவின் மருமகள் ஹெலிகாப்டரில் குடும்பத்தினருடன் தப்பியோடும் காட்சிகளும் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து மகிந்த ராஜபக்ச கொழும்பை விட்டு தப்பி ஓடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்தனர். 

இத்தகைய பரபரப்பான சூழலால் இலங்கையில் பதற்றம் நிலவி வருகிறது. உலக நாடுகளே இலங்கையில் நடைபெற்றுவரும் மக்கள் புரட்சியையும் அரசியல் மாற்றத்தையும் உற்று நோக்கி வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவிவரும் சூழல் குறித்து 13 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அறிந்திருந்ததாக புதிய தகவலை கூறும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி அவர்களின் நேர்காணலை காண்போம்.