திருச்சி அகதிகள் முகாம் அவலங்கள் : தமிழக அரசின் பாராமுகம், விடிவுதான் என்ன?

By Irumporai Jun 09, 2022 04:05 AM GMT
Report

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை தமிழ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் (தண்டனை குற்றவாளிகள்) தங்களுக்கான தண்டனை காலம் முடிந்த பின்னரும் தங்களை விடுவிக்காமல் சிறப்பு முகாமில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் இதனிடையே திருச்சி சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை தமிழ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் திருச்சியில் உள்ள அகதிகளின் அவலங்கள் குறித்து வழக்கறிஞர் ஜான்சன் ஐபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்காக