திருச்சியில் முன்விரோதம் காரணமாக ரவுடி தலை துண்டித்து படுகொலை - அதிர்ச்சி சம்பவம்

murder killed rowdy trichy
By Anupriyamkumaresan Sep 17, 2021 05:55 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

திருச்சியில் முன்விரோதம் காரணமாக ரவுடி தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சக்திவேல். இவருக்கும், பொன்மலையை சேர்ந்த மற்றொரு ரவுடியான அலெக்ஸ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு சக்திவேலின் தம்பியான சின்ராசு, பொன்மலைப்பட்டி கடை வீதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள், சின்ராசுவை ஓட ஒட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனினும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், சின்ராசுவின் தலையை துண்டித்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

திருச்சியில் முன்விரோதம் காரணமாக ரவுடி தலை துண்டித்து படுகொலை - அதிர்ச்சி சம்பவம் | Trichy Rowdy Murder Head Cut Killed

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை உதவி ஆணையர் காமராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலையான சின்ராசு மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

மேலும், பிரபல ரவுடியான அலெக்ஸ் முன்விரோதம் காரணமாக சின்ராசுவை வெட்டி கொன்றதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, தப்பியோடிய ரவுடி அலெக்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.