தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள் - 141பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் திருச்சி விமானம்; உச்சகட்ட பரபரப்பு

Tamil nadu United Arab Emirates Air India trichy
By Karthikraja Oct 11, 2024 02:16 PM GMT
Report

141பயணிகளுடன் உள்ள விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு ஏர் இந்தியா(air india) விமானம் 141 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது. 

air india trichy flight

விமானம் பறக்க துவங்கிய பின், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் ஒரு மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமடித்து வருகிறது.

தயார் நிலையில் விமான நிலையம்

அன்னவாசல், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் விமானம் 13 முறை சுற்றி வந்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க எரிபொருள் குறைந்தவுடன் விமானத்தை தரையிறக்க திட்டமிட்டுள்ளனர். 

air india trichy flight

விமானத்தில் 141 பயணிகள் உள்ள நிலையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்திற்கு ஏராளமான ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படை வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.