செல்போன் டார்ச்சில் நோயாளிகளுக்கு சிகிச்சை - அரசு மருத்துவமனையின் அவலம்!
நோயாளிகளுக்கு செல்போன் டார்ச்சில் சிகிச்சை அளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் மின்வெட்டு
ஆந்திரப் பிரதேச மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பார்வதிபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறுகின்றனர்.
மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரேக் பிடிக்காததால் ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ ஊழியர்கள், நோயாளிகளுக்கு முதலுதவி அளிக்கும் போது, ஒரு கையில், நோயாளிகளின் காயங்களை மையமாக வைத்து, மற்றொரு கையால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
