இந்த 6 நாடுகளுக்கு கட்டுப்பாடு போட்ட இந்தியா : காரணம் என்ன?

COVID-19 China
By Irumporai Jan 01, 2023 03:45 AM GMT
Report

உலகம் முழுவதும் குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்த நிலையில் சீனாவின் மிகவும் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது.

மிரட்டும் கொரோனா

ஆகவே கொரோனாபரவலை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளை மீண்டும் சில நாடுகள் கொண்டுவந்துள்ளன.

இந்த 6 நாடுகளுக்கு கட்டுப்பாடு போட்ட இந்தியா : காரணம் என்ன? | Travelers Coming To India From 6 Countries

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆறு நாடுகளுக்கு கட்டுப்பாடு

அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.