ஒரு நொடியில் உயிர் தப்பிய நபர்…பைக்கை தூள்தூளாக்கிய ரயில் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

Nandhini
in பொழுதுபோக்குReport this article
ஒரு நொடியில் உயிர் தப்பிய நபரின் பைக்கை தூள்தூளாக்கிய ரயிலின் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்
அந்த வீடியோவில், மறுமுனையில் ரயில் ஒன்று வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தை கடக்க மக்கள் முயற்சி செய்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் பைக்கில் முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிரே மின்னல் வேகத்தில் ரயில் வந்துக்கொண்டிருந்தது.
உடனே சுதாரித்துக் கொண்ட அந்த நபர் பைக்கை திருப்புவதற்குள் பைக் சக்கரம் தண்டவாளத்தில் மாட்டிக் கொண்டது. உடனே கீழே இறங்கிய அந்த நபர் பைக்கை தண்டவாளத்திலிருந்து எடுக்க முயற்சி செய்தார்.
வைரலாகும் சிசிடிவி வீடியோ
ஆனால் பைக்கை எடுக்க முடியவில்லை. அதற்குள் ரயில் மின்னல் வேகத்தில் கிட்ட நெருங்க, ஒரு நொடியில் உயிர் தப்பினார் அந்த நபர். மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்த ரயிலில் பைக் சிக்கி சுக்குநூறாக உடைந்து தூள் தூளானது.
தற்போது இது குறித்த சீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் வாழ்க்கை உங்களுடையது. பைக் உங்களுடையது. ஏன் இந்த அவசரம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
इतनी भी क्या जल्दी है. ज़िंदगी आपकी है, बाइक भी आपका ‘था’. pic.twitter.com/BxMPUbQGLM
— Awanish Sharan (@AwanishSharan) August 30, 2022