தமிழ்நாட்டில் பயணிகள் வருகை குறைவால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் நாளை முதல் இயக்கம்
Train
Tamilnadu
Egmore
By Thahir
தமிழ்நாட்டில் பயணிகள் வருகை குறைவால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டருந்த 10 சிறப்பு ரயில்களின் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சாவூர், கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி செல்லும் 4 சிறப்பு ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இதேபோல், சென்னை சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரம், ஆலப்புழா, மேட்டுப்பாளையம் செல்லும் 3 சிறப்பு ரயில்களும் நாளை புறப்பட உள்ளன.

மேலும், கோவையிலிருந்து நாகர்கோவில், மதுரையில் இருந்து புனலூர் செல்லும் சிறப்பு ரயில்களும்,
திருவனந்தபுரத்திலிருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயிலும் நாளை முதல் இயக்கப்பட உள்ளன.