இந்தியா - வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை - 29 ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிப்பு..!
இந்தியா - வங்கததேசம் இடையே பயணிகள் இரயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான இரயில் சேவைகள் மார்ச் 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள இந்த இரயில் சேவையை தற்போது கொரோனா தொற்று பரவல இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் குறைந்துள்ளதால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
டாக்காவிலிருந்து கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் வங்காளதேச ரெயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ஆகியவை கொல்கத்தாவிலிருந்து இந்திய ரயில்வே ரேக் மூலம் மே 29, 2022 அன்று மீண்டும் இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.