மாங்கல்யம் தந்துனானே : செல்ல பிராணிகளுக்கு முறைப்படி திருமணம்.. வைரலாகும் வீடியோ

Viral Video
By Irumporai Nov 14, 2022 05:06 AM GMT
Report

ஹரியானா மாநிலம் குருகிராமில் செல்ல பிராணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாய்களுக்கு திருமணம்

ஹரியானா, மாநிலம் குருகிராம் பகுதியில் வசித்து வருபவர்கள்தான் மணிதா மற்றும் சவிதா இவர்களுக்கு செல்ல பிராணியாக ஷெரு என்ற ஆண் நாய் உள்ளது, இதனை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகின்றனர்.

இவர்களின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் ராணி என்பவர் செல்ல பிராணியாக ஸ்வீட்டி என்ற பெண் நாயினை வளர்த்து வருகின்றனர்.

மாங்கல்யம் தந்துனானே : செல்ல பிராணிகளுக்கு முறைப்படி திருமணம்.. வைரலாகும் வீடியோ | Traditional Weddings For Pets Viral Video

இந்த நிலையில் இருவரும் தங்களின் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி சுமார் 100 பேருக்கு அழைப்பு வைத்து , முறைப்படி நாய்களுக்கு திருமணத்தில் நடக்கும் சடங்குகளை செய்தனர் .

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த நிகழ்வு குறித்து சவிதா கூறுகையில் நான் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பிரியம் உள்ளவள். எனது கணவரும், நானும் செல்ல பிராணிகளை பராமரித்து வருகிறோம்.

எனக்கு குழந்தை இல்லை. அதனால், ஸ்வீட்டியை நாங்கள் குழந்தையாக வளர்த்து வருகிறோம். ஆகவே திருமணம் செய்து வைத்தோம் என கூறியுள்ளார்.

மனிதன் மனிதனுக்கு அன்பு காட்டுவது கால ஓட்டத்தில் குறைந்து வரும் நிலையில் , தன் வீட்டில் உள்ள செல்ல பிராணிக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ ஹரியானாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.