பேசிவிட்டு பின்னால் சமாளிக்கலாம் என உதயநிதி பேசக்கூடாது...டி ஆர் பாலு எச்சரிக்கை..!
என்ன வேண்டுமானாலும் பேசலாம், பேசிவிட்டு சமாளிக்கலாம் என என்ற எண்ணத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு எச்சரித்துள்ளார்.
டி ஆர் பாலு எச்சரிக்கை
அண்மையில் வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எச்சரித்துள்ளார்.
விழா மேடையில் பேசியுள்ள அவர், உதயநிதி தனது தந்தையை பார்த்து மட்டுமே பயப்படுகிறார் என கூறி, என்ன வேண்டுமானாலும் பேசலாம் பேசிவிட்டு பிறகு சமாளித்து விடலாம் என உதயநிதி பேசக்கூடாது என எச்சரித்தார்.
தவறாக பரவிய கருத்துக்கள்
மேலும், தன் கையில் இருக்கும் பொருளை உடைத்து விட கூடாது என்ற எண்ணத்தை மனதில் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசும் போது, டெங்கு, மலேரியா போன்ற சனாதனத்தையும் ஒழிக்கவேண்டும் என பேசினார். இதனை பாஜகவினர் குறிப்பாக வடக்கில் இருக்கும் பாஜக கட்சியினர் அமைச்சர் ஹிந்துக்களின் இனப்படுகொலைக்கு உதயநிதி ஸ்டாலின் தூண்டுவதாக கருத்துகளை பரப்பினர் என்பது குறிப்பிடதக்கது.