இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது டோல்கேட் கட்டணம் உயர்வு : அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..

Tamil nadu Chennai India
By Anbu Selvam Mar 31, 2023 09:22 AM GMT
Report

சென்னை புறநகர் பகுதியில் உள்ள சுங்க சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது .

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்போவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது . இந்த நிலையில் தமிழகத்தில் 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்க போவதாக தகவல் வெளியாகியது .

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது டோல்கேட் கட்டணம் உயர்வு : அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.. | Tollgate Hike Effective April 1

சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ரூ 10 முதல் ரூ 60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது . சென்னை புறநகர் பகுதியில் உள்ள பரனூர் ,உத்தண்டி ,திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம், வானகரம் முதலான சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது .

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

அதன் படி காருக்கு ரூ. 60 லிருந்து ரூ .70 ஆகவும் , இலகுரக வாகனங்களுக்கு ரூ. 105 லிருந்து ரூ. 115 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது . பேருந்துகளுக்கு ரூ.225 லிருந்து ரூ. 240 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

சுங்க கட்டணம் உயர்வதால் , லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது .இந்த கட்டண உயர்வுக்கு வணிகர் சங்கங்களும் ,அரசியல் தலைவர்களும் ,வாகன ஓட்டிகளும், தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிட்டத்தக்கது .