டோக்கியோ பாராலிம்பிக் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்: ஒரே நாளில் 4 பதக்கம்!
india
gold
tokyo
wins
paralympic
By Anupriyamkumaresan
பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா, ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்தியா வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது.
இதன் மூலமாக இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை பெற்றுள்ளது.