இன்று காலை தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு

Tamil nadu
By Thahir Mar 13, 2023 02:27 AM GMT
Report

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை தொடங்குகிறது.

இன்று +2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் இன்று தொடங்குகிறது. இதற்காக 3,169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8.8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த பொதுத் தேர்வினை எழுத உள்ளனர்.

இன்று காலை தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு | Today Start Plus 2 Exam

மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான அனைத்து வசதிகளையும் தேர்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதே போல் புதுச்சேரியிலும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று காலை தொடங்குகிறது. சுமார் 14,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகின்றனர்.

இதற்காக 40 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு அறையில் மாணவர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களும் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.