சென்னையிலும் சதமடித்த பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள், மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது.
சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.
இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை, நேற்றைய விலையிலிருந்து 33 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.100.13ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.93.72 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
பல்வேறு மாவட்டங்களை தொடர்ந்து சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ஐ தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.