நெருக்கடி நிலையில் இந்தியா செய்த உதவி உயிர் மூச்சு போன்றது : ரணில் விக்ரமசிங்க புகழாரம்

Sri Lanka Parliament Ranil Wickremesinghe
By Irumporai Aug 03, 2022 07:02 AM GMT
Report

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இன்னும் சரியாகவில்லை. இதன் காரணமாக புதிய அதிபராகப் பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கோரி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்கு நன்றி

இந்த நிலையில் இன்று அதிபர் ரணில் விக்கிரமசிங்க  9 ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கொள்கை உரையினை நிகழ்த்தினார்.

நெருக்கடி நிலையில் இந்தியா செய்த உதவி உயிர் மூச்சு போன்றது : ரணில் விக்ரமசிங்க புகழாரம் | Today Parliament Live Ranil Thanks India

உயிர் மூச்சு

அப்போது நெருக்கடியான தருணத்தில் இலங்கை மீண்டு வர இந்தியா உதவியது. இந்திய பிரதமர் தலைமையில் அந் நாட்டு அரசு எங்களுக்கு உதவி செய்தது வாழ்வதற்கு தேவைப்படும் சுவாசம் போன்றது என்று கூறிய ரணில்.

நெருக்கடி நிலையில் இந்தியா செய்த உதவி உயிர் மூச்சு போன்றது : ரணில் விக்ரமசிங்க புகழாரம் | Today Parliament Live Ranil Thanks India

இந்திய பிரதமருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இலங்கை சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் , நெருக்கடி நிலையிலிருந்து நாட்டினை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் , முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிவரை நெருக்கடி  நிலை தொடரும் எனக் கூறினார்.