வார இறுதியில் மேலும் எகிறிய தங்கம் விலை - மக்கள் கலக்கம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூன் 21) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து, ரூ.9,235-க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.73,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் கிராம் ரூ.7,600-க்கும், சவரன் ரூ.60,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கிலோ ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.