உச்சத்தை தொட்ட தங்கம் விலை - கலக்கத்தில் இல்லத்தரசிகள்!
தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கியமுதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.
ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.44,720க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, ரூ. 5,590க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ. 82க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 82,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.