தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் நிம்மதி
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பால் பொதுமக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையின் படி கடந்த 24 மணிநேரத்தில் 24,405 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,72,751 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 2,062 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 460 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 32,221 பேர் குணமடைந்துள்ளதாகவும் , தமிழகத்தில் இதுவரையிலும் 18,66,660 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 13 வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.