தாறுமாறாக எகிறிய தங்கம் விலை - ரூ.68 ஆயிரத்தை கடந்தது..
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 1) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.68,080க்கும், கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.8,510க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.