14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமண ஏற்பாடு.. பாட்டிக்கு வலைவிரித்த போலீசார்!
தாய்க்கு தெரியாமல் 14 வயது சிறுமிக்கு, 40 வயது நபருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.
திருமண நிச்சயம்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி மாவட்டம் கூடூர் அடுத்துள்ள ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.
இவருக்கு நாயுடு பேட்டையை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரோடு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நடந்தது என்ன?
லாரி டிரைவராக வேலை செய்த சுரேஷ் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து ராஜலட்சுமி அவரது மாமியார் சுஜாதா இடையே சொத்து தகராறு ஏற்பட்டதால்
ராஜலட்சுமி தன்னுடைய குழந்தைகளை மாமியாரிடம் விட்டு விட்டு, நாயுடு பேட்டையில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வருகிறார். அடிக்கடி கூடூருக்கு சென்று குழந்தைகளை பார்த்து வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்தநிலையில் கடந்த மே மாதம் 25-ந் தேதி அன்று மருமகள் ராஜலட்சுமிக்கு தெரியாமல் அவரது 14 வயதுமகளுக்கு, மாமியார் சுஜாதா, வெங்கடாச்சலம் மண்டலம் பூடிபர்த்தி பகுதியை சேர்ந்த சீனிவாஸ் (வயது 40) என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜலட்சுமி கூடூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களே உஷார்..! மீண்டும் வந்தாச்சு கொரோனா..போட்டாச்சு கண்டிஷன்