சூர்யா விருது வாங்க..ஜோதிகா போட்டோ எடுக்க - அட அட என்ன ஒரு அழகு
நடிகர் சூர்யா தேசிய விருது பெறும் போது மனைவி ஜோதிகா தனது செல்போனில் புகைப்படம் எடுத்த வீடியோ காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தேசிய விருது வாங்கியது படக்குழு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரின் 2டி நிறுவனம் மூலம் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.இப்படம் பல விமர்சனங்களை பெற்றாலும், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் 2020ல் வெளியான திரைப்படம் சூரைப்போற்று திரைப்படம் இப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். படத்தின் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
பின்னர் சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா முரளிக்கு வழங்கப்பட்டது.
மேலும் சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது தயாரிப்பாளர் ஜோதிகாவுக்கு குடியரசு தலைவர் வழங்கினார்.
என்ன ஒரு அழகு
நடிகர் சூர்யாவுக்கு விருது வழங்கப்பட்ட போது, மனைவி ஜோதிகா செல்போனில் புகைப்படம் எடுத்தார்.
அதே போன்று ஜோதிகா விருது பெறும் போது நடிகர் சூர்யா மொபைலில் புகைப்படம் எடுத்தார்.
தற்போது இவர்களின் இந்த வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் என்ன ஒரு அழகான ஜோடி அட அட... என பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யாவின் மகன் தேவ், மகள் தியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.