டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு குறித்து இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!

Exam Announcement Important TNPSC டிஎன்பிஎஸ்சி Group4 குரூப்4
By Thahir Mar 29, 2022 05:47 AM GMT
Report

குரூப் 4 தேர்வு குறித்து அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காலியாக உள்ள 5,831 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2,குரூப் ஏ தேர்வும்,5,255 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெறும் என கடந்த 18-ந் தேதி டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்பபதிவு கடந்த (மார்ச்) 23ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்றும், தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு குறித்தான அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வு தேதிகள், விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள், கடைசி தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகியவற்றை தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.