குரூப்- 4 தேர்வின் 2 ஆம் கட்ட கலந்தாய்வு - டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
குரூப்- 4 தேர்வின் 2 ஆம் கட்ட கலந்தாய்வு குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-4ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கிராம நிா்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான இதன் தேர்வு முடிவுகள் அதே ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னா் இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது. தொடா்ந்து கிராம நிா்வாக அதிகாரி, இளநிலை உதவியாளா், வரி வசூலிப்பாளா் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மாா்ச் 17 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதில் மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் 209 இளநிலை உதவியாளா் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவில்லை. அதேபோல், கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தட்டச்சா் பணிக்கான கலந்தாய்வில் மொத்தம் 221 இடங்கள் என காலியாக உள்ள 430 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.