கதவை தட்டிக்கொண்டே இருந்த காவலர்,மனைவி கதவை திறக்காததால் தற்கொலை !
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் காவலர் ரத்தினகிரி இவர் தனது மனைவி நாகஜோதி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். தனது மனைவி நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவை திறக்காததால், இறந்துவிட்டதாக கருதி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலரால் வேடசந்தூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
காவலர் ரத்தினகிரியின் மனைவி நாகஜோதி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவி தனித்தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தவேளையில், அதிகாலை 3மணி அளவில் தன் மனைவி நாகஜோதி தூங்கிக்கொண்டிருந்த அறையை பலமாக தட்டி உள்ளார். இதில் நாகஜோதியின் அரை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் நாகஜோதி தற்கொலை செய்து கொண்டதாக கருதி மனமுடைந்த காவலர் ரத்தினகிரி செய்வதறியாது திகைத்து நின்று தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீண்ட நேரம் அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்த கணவர் சிறிது நேரத்திற்குப் பின் எவ்வித சப்தம் இன்றி இருந்ததால் அவர் தூங்கிவிட்டதாக நினைத்து நாகஜோதி தனது அறையில் உறங்கினார். பின்பு காலையில் எழுந்து அறையின் கதவை திறந்தபோது கதவு திறக்க முடியாமல் போனதால் அருகிலிருந்த உறவினர்களுக்கு நாகஜோதி தகவல் கொடுத்த நிலையில் தகவல் இருந்த உறவினர்கள் கதவை உடைத்து நாகஜோதி மீட்டனர். பின்பு ரத்தனகிரி இருந்த அறையின் கதவை உடைத்து பார்த்தபோது ரத்தனகிரி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு வேடசந்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ரத்னகிரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
நீண்டநேரம் மனைவி உறங்கிக்கொண்டு இருந்த அறையின் கதவை தட்டியும் திறக்கப்படாததால் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கருதி தானும் தற்கொலை செய்துகொண்ட கணவரால்
அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.