தமிழகத்தில் மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

rules tamilnadu new lockdowm
By Praveen May 03, 2021 06:19 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதை அடுத்து மே 6 முதல் மே 20ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் மே 6ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகைக்கடை, தேனீர் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில், மெட்ரோ, தனியார் பேருந்துகளில் 50% பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதுதவிர இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.